ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க பல கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகங்களாகத் தயாராகி வரும் படம் 'புஷ்பா'. ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது.
இதனிடையே, கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் அறிவிப்பு முதல் பார்வையுடன் இந்த மாதத்தில் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் பின்னணியில் எரிந்து கொண்டிருக்கும் காடு, கையில் ஒரு கம்புடன் சாதாரண லுங்கி, அழுக்கு சட்டை, ரப்பர் செருப்பு அணிந்த ஒருவராக சிம்பு நின்று கொண்டிருக்கும் போஸ்டர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அடுத்து இன்று இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இதில் ஒரு பத்துக்குப் பத்து அறைக்குள் லுங்கி, பனியனுடன் கூலித் தொழிலாளர்கள் போல சிலர் அமர்ந்து கொண்டும், தூங்கிக் கொண்டும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, சிம்பு எதையோ யோசித்துக் கொண்டிருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
படத்தின் தலைப்பே இது காட்டின் பின்னணியில் உருவாகும் ஒரு படம் என்பதை உணர்த்தியிருக்கிறது. இதுவரை வெளியாகியுள்ள போஸ்டர்களைப் பார்த்தால் செம்மரக் கடத்தலைப் பற்றித் தயாராகி வரும் 'புஷ்பா' படம் போலவே இந்தப் படமும் வேறு ஒரு கடத்தலைப் பற்றிய படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுதம் மேனன் இதுவரை கிராமமும், கிராமம் சார்ந்த கதையை இயக்கியதேயில்லை. முதல் முறையாக அந்தக் களத்தை அவர் தொட்டிருக்கிறார். அப்படி என்னதான் சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இரண்டு போஸ்டர்கள்.