ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் சூரரை போற்று. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த படத்திற்கான பட்டியலில் தேர்வான ஒரே இந்திய படம் இதுதான். பின்னர் கோல்டன் குளோப் விருது விழா உள்ளிட்ட பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இலவச விநியோக உரிமை என்ற முறையில் திரையரங்குகளுக்கு, படத்தை தயாரித்த 2டி நிறுவனம் கொடுக்கவுள்ளது. அதாவது படத்தை திரையிட்டு மொத்த வசூலையும் திரையரங்குகளும் திரையரங்கு அதிபர் சங்கமும் எடுத்துக் கொள்ளலாம். தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் விரைவில் உடன்பாடு ஏற்பட்டு இந்த வாரத்திலேயே படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
முன்னதாக ஓடிடியில் தொடர்ந்து சூர்யா நடித்த, தயாரித்த படங்கள் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யா மீது அதிருப்தியில் இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. திரையரங்குகளுக்கு ரசிகர்களை மீண்டும் இழுக்க சூரரைப்போற்று உதவலாம்.