பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! | பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! |

தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பையா, அயன், சுறா, சிறுத்தை, வீரம், தேவி, பாகுபலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் தமன்னா. தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் டீகே இயக்கும் திகில் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதுதவிர சீட்டிமார், கஹானி, மேஸ்ட்ரோ உள்ளிட்ட 5 தெலுங்கு படத்திலும், பிளான் ஏ பிளான் பி, போலே சுடியன் என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இத்தனை பிசியான வாழ்க்கைக்கு இடையிலேயும் தற்போது புதிதாக புத்தகம் எழுதி எழுத்தாளராகவும் மாறி இருக்கிறார். அவர் எழுதியிருக்கும் புத்தகத்தின் பெயர் பேக் டு ரூட் (வேர்களை தேடி). பண்டைய கால இந்திய மக்களின் வாழ்க்கை முறைகள் மூலம் நோய்களை தடுத்து ஆயுட் காலத்தை நீட்டிக்கும் வழி முறைகள் குறித்து புத்தகத்தில் அவர் எழுதி உள்ளார். அவருடன் இணைந்து லூக் கவுண்டினோகோ என்பவரும் எழுதியிருக்கிறார்.
இதுகுறித்து தமன்னா கூறியிருப்பதாவது: இது நான் எழுதிய முதல் புத்தகம் என்பதால் அதிக மக்களை சென்று சேர வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த புத்தகத்தின் மூலம் நமது பழங்கால மக்களின் வாழ்க்கை முறைகளை மக்கள் புரிந்து கொள்வார்கள். வேகமான இன்றைய உலகத்தில் மக்கள் கலாசார பண்பாட்டை அறிந்து கொள்வது முக்கியம். என்கிறார்.




