பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
அருண் விஜய் நடித்து வரும் புது படத்தின் படபிடிப்பு ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. ஹரி இயக்கி வருகிறார். சென்னை, பழநி, காரைக்குடி, தூத்துக்குடி போன்ற பகுதிகளை தொடர்ந்து இப்பொழுது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தனுஷ் கோடியில் பரபரப்பான சண்டை காட்சி படமாக்கப்பட்டிருந்தது. மதிய இடைவேளையில் அருகே இருந்த ரோட்டுக் கடையில் திடீரென அருண் விஜய் நுழைந்ததும் கடையில் இருந்தவர்கள் அவரை பார்த்து அதிர்ச்சியுற்றனர்.
நான் இங்கே சாப்பிடுகிறேன்.. என்ன இருக்கிறது என்று கேட்க சூடா மீன் குழம்பு, மீன் வறுவல் இருக்கிறது என்று சொல்ல, அவருக்கு இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. அவருடன் இன்னும் சிலரும் அமர்ந்து சாப்பிட்டனர். சுட சுட மீன் அருமையான சுவையுடன் இருந்ததினால், தனது டயட்டையும் மீறி நன்றாக சாப்பிட்டார். அந்த கடை நடத்தும் அம்மாவும் அவரை நன்றாக அம்மாவை போல் கவனித்து பறிமார.. அவரை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியது. கண் கலங்க வைத்தது. சாப்பிட்டு விட்டு போகும் போது அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு அவருடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார். அதை இன்று அவரது டுவிட்டர் பக்கத்தில், “ரோட்டுக் கடையில் உணவருந்திய போது.. இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது.. என்று பதிவிட்டுள்ளார்.