'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு |
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் அருகில் உள்ள 'உர்ச்சா' என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த நகரத்தில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் செல்லும் போது இயக்குனர் மணிரத்னம், கார்த்தி ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து 'உர்ச்சா' படப்பிடிப்பு பற்றிய அப்டேட்டை நேற்று பிரகாஷ்ராஜ் கொடுத்திருந்தார்.
இன்றைய அப்டேட்டாக குந்தவை கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் சொல்லப்படும் த்ரிஷா கொடுத்திருக்கிறார். உர்ச்சாவில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெறும் படப்பிடிப்புப் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.அதோடு, அங்கே தெருவோரக் கடைகளிலும் ஷாப்பிங் சென்றிருப்பார் போலிருக்கிறது. அந்த வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.
கடைசிக் கட்டப் படப்பிடிப்பை 'பொன்னியின் செல்வன்' படக்குழு விறுவிறுப்பாக எடுத்து வருகிறது.