மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் அருகில் உள்ள 'உர்ச்சா' என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த நகரத்தில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் செல்லும் போது இயக்குனர் மணிரத்னம், கார்த்தி ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து 'உர்ச்சா' படப்பிடிப்பு பற்றிய அப்டேட்டை நேற்று பிரகாஷ்ராஜ் கொடுத்திருந்தார்.
இன்றைய அப்டேட்டாக குந்தவை கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் சொல்லப்படும் த்ரிஷா கொடுத்திருக்கிறார். உர்ச்சாவில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெறும் படப்பிடிப்புப் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.அதோடு, அங்கே தெருவோரக் கடைகளிலும் ஷாப்பிங் சென்றிருப்பார் போலிருக்கிறது. அந்த வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.
கடைசிக் கட்டப் படப்பிடிப்பை 'பொன்னியின் செல்வன்' படக்குழு விறுவிறுப்பாக எடுத்து வருகிறது.