வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் அருகில் உள்ள 'உர்ச்சா' என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த நகரத்தில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் செல்லும் போது இயக்குனர் மணிரத்னம், கார்த்தி ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து 'உர்ச்சா' படப்பிடிப்பு பற்றிய அப்டேட்டை நேற்று பிரகாஷ்ராஜ் கொடுத்திருந்தார்.
இன்றைய அப்டேட்டாக குந்தவை கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் சொல்லப்படும் த்ரிஷா கொடுத்திருக்கிறார். உர்ச்சாவில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெறும் படப்பிடிப்புப் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.அதோடு, அங்கே தெருவோரக் கடைகளிலும் ஷாப்பிங் சென்றிருப்பார் போலிருக்கிறது. அந்த வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.
கடைசிக் கட்டப் படப்பிடிப்பை 'பொன்னியின் செல்வன்' படக்குழு விறுவிறுப்பாக எடுத்து வருகிறது.




