ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதூன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்த படம் தற்போது, தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் என்கிற பெயரில் உருவாகிறது. இந்தப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்கியுள்ளார். சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, வனிதா விஜயகுமார் என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட தியாகராஜன் தற்போது டப்பிங் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களாக பிரியா ஆனந்த், ஊர்வசி ஆகியோர் இந்தப்படத்திற்கான தங்களது டப்பிங் பணிகளை முடித்து கொடுத்தனர். தற்போது சமுத்திரக்கனி டப்பிங் பேசி வருகிறார். தியேட்டர்கள் திறப்பு என்கிற அறிவிப்பு வரும்போது இந்தப்படம் திரையிடுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்கிற முனைப்புடன் ஒரு தயாரிப்பாளராக வேகமாக செயல்பட்டு வருகிறார் தியாகராஜன்.