எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் நடிகைகள் தான் முன்னணி நடிகைகளாக இருப்பார்கள் என்பது எழுதப்படாத ஒரு விதி. எப்படியாவது தங்கள் பெயர்களும் ஏதோ ஒரு விதத்தில் செய்திகளில் வந்தால் சிறப்பு என சிலர் நினைப்பார்கள்.
ஒரு நடிகையோ அல்லது நடிகரோ படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர்களைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக வரும். அவர்கள் நடிக்காமல் சும்மா இருந்தால் சினிமாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
ஆனால், இந்த சமூக வலைத்தள காலத்தில் தங்களைப் பற்றிய அப்டேட் இருந்து கொண்டிருக்க வேண்டும் என சில நடிகைகள் நாள்தோறும் விதவிதமான போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களைப் பகிர்கிறார்கள். அவை டிவிக்கள் வரையிலும் வந்துவிடுகிறது.
அந்த பார்முலாவை இப்போது பலரும் ஆரம்பித்துவிட்டார்கள். 'துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை' என இரண்டு தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அனு இம்மானுவேல். இரண்டு படங்களிலுமே கவர்ச்சி காட்ட முடியாத கதாபாத்திரங்கள் தான் அவருக்குக் கிடைத்தன.
அவரது கைவசம் தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் 'மகா சமுத்திரம்' படம் மட்டுமே உள்ளது. அதனால், கவர்ச்சி காட்டினால் இயக்குனர்களும் புதிய பட வாய்ப்புகளைத் தருவார்கள் என சில கவர்ச்சிப் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ஆரஞ்ச் நிற உடையில் அவர் காட்டியிருக்கும் கவர்ச்சி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டது.