ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன் மற்றும் பலர் நடித்துள்ள 'நெற்றிக்கண்' படம் நாளை(ஆக.,13) ஓடிடியில் வெளியாகிறது. நயன்தாரா நடித்து இதற்கு முன்பு வெளியான 'மூக்குத்தி அம்மன்' படமும் ஓடிடி தளத்தில்தான் வெளியானது. அப்படத்தின் விளம்பரங்களில் நயன்தாரா புறக்கணிக்கப்பட்டாலும் அவருக்காக அப்படத்தைப் பார்த்தவர்கள் அதிகம்.
ஓடிடி மூலம் மக்களிடம் நேரடியாகச் செல்ல முடிகிறது என்பதைப் புரிந்து கொண்டதால் தான் 'மூக்குத்தி அம்மன்' புறக்கணிப்பு விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு 'நெற்றிக்கண்' படத்திற்காக டிவி பேட்டி வரை நயன்தாரா சென்றிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இப்படத்தில் நயன்தாரா கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். 2011ல் வெளிவந்த கொரியன் படமான 'பிளைன்ட்' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் இந்தப் படம்.
டிரைலரைப் பார்த்த போது மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த, 'சைக்கோ' படம் போலவே இருந்தது. இருந்தாலும், நயன்தாரா நடிப்பதால் 'நெற்றிக்கண்' படத்திற்கு தனி வரவேற்பு இருக்க வாய்ப்புள்ளது.
தனது முந்தைய வெளியீடான 'மூக்குத்தி அம்மன்' போலவே ஓடிடியிலும் 'நெற்றிக்கண்' படத்தையும் ஹிட் கொடுப்பாரா நயன்தாரா என்பது நாளை தெரிந்துவிடும்.