புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவில் ஏழு வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் சந்தானம். தானும் நாயகனாக மாற வேண்டும் என 2014ல் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தை சொந்தமாகத் தயாரித்து நாயகனாக நடித்தார். அந்தப் படமும் அடுத்து வெளிவந்த 'இனிமே இப்படித்தான்' படமும் வெற்றி பெறவில்லை. ஆனாலும், 2016ல் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' படம் சந்தானத்தைக் காப்பாற்றியது.
2015ம் ஆண்டிலேயே சந்தானம் நாயகனாக நடிக்க ஆரம்பமான படம் 'சர்வர் சுந்தரம்'. 2016லேயே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2017ல் படத்தை வெளியிட திட்டமிட்டார்கள். அதன்பின் பல முறை படத்தின் வெளியீட்டை அறிவித்தாலும் இதுவரையிலும் படம் வெளியாகவில்லை. அதன்பின் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்தும் அதுவும் நடக்கவில்லை. இப்போது மீண்டும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
மேலும், சந்தானம் நாயகனாக நடித்துள்ள மற்றொரு படமான 'டிக்கிலோனா' படத்தையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்தப் படமும் கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய படம். சில பால காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. கார்த்திக் யோகி இயக்கத்தில் யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் அனகா, ஷெரின் கான்ச்வாலா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். சீரியஸ் படங்களாகவே ஓடிடியில் வந்து கொண்டிருக்கும் நிலையில், சந்தானத்தின் இரண்டு படங்களும் அடுத்தடுத்து ஓடிடியில் வருவது கொஞ்சம் மாற்றமாகத்தான் இருக்கும்.