புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
கார்த்திக் நரேன் இயக்கும் தனது 43வது படமான மாறன் படத்தில் நடித்து முடித்துவிட்ட தனுஷ், அடுத்தபடியாக மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தில் அவருடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் என மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இது தனுஷின் 44ஆவது படமாகும்.
இந்நிலையில் தெலுங்குப்பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தான் நடிக்கயிருந்த மூன்று மொழிப்படத்தை அடுத்த ஆண்டுக்கு தனுஷ் தள்ளிவைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படம் மூன்று மொழியில் உருவாவதோடு ஆரம்ப கட்ட பணிகள் இப்போது தான் தொடங்கப்பட்டிருப்பதால் இந்த வேலைகளை சேகர் கம்முலா முடிப்பதற்குள் மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துவிட திட்டமிட்டுள்ளாராம்.
அதன்காரணமாக சேகர் கம்முலாவுடன் தனுஷ்இணையும் அவரது 45ஆவது படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாம்.