மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளிவந்த ஆந்தாலஜி படமான 'நவரசா' படத்தில் கார்த்திக் நரேன் இயக்கிய 'புராஜக்ட் அக்னி' என்ற ஒரு படமும் இடம் பெற்றது. அதில் அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா, சாய் சித்தார்த் ஆகியோர் நடித்திருந்தனர்.
அதில் அதிகமான ஆங்கில வசனங்கள் இருந்ததும், அதைப் புரிந்து கொள்ள போடப்பட்ட தமிழ் சப்-டைட்டிலில் பல எழுத்துப் பிழைகள் இருந்ததும் பெரிய குறையாக இருந்தது. இருந்தாலும், அரை மணி நேரத்தில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதையை நல்ல டிவிஸ்ட்டுடன் கார்த்திக் நரேன் கொடுத்திருந்தார் என்பது பலரது விமர்சனமாக இருந்தது.
அறிவியல், ஜோதிடம், கம்ப்யூட்டர், பழைய வரலாறு, ஏலியன்கள், நிஜ உணர்வு, உள் உணர்வு என பல வித விஷயங்களை சாதாரண ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு குழப்பத்துடன் அரை மணி நேரக் கதையில் வைத்திருந்தார்.
சில குறும்புக்கார ரசிகர்கள் கார்த்திக் நரேன் தான் தமிழ் சினிமாவின் அடுத்த 'கிறிஸ்டோபர் நோலன்' என்று வேறு கமெண்ட் அடித்துள்ளார்கள். அதனால், இந்த 'புராஜக்ட் அக்னி' யை ஒரு முழு நீள சினிமாவாக எடுக்க உள்ளார் கார்த்திக் நரேன் என்பது அவர் பதிவிட்டுள்ள டுவீட் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
“புராஜக்ட் அக்னிக்குக் கிடைத்த பெரும் வரவேற்புக்கு, ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மனப்பூர்வ நன்றி. விஷ்ணு, கிருஷ்ணா, கல்கி ஆகியோரின் பயணம் இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நவரசாவில் உள்ள லோ பட்ஜெட் 'புராஜக்ட் அக்னி'யை அவர் ஹைபட்ஜெட் திரைப்படமாக உருவாக்கப் போகிறார் போலிருக்கிறது. அதிக ஆங்கில வசனம், தப்பும் தவறுமான தமிழ் சப்டைட்டில்கள் ஆகியவை அந்தப் படத்திலாவது இல்லாமல் இருக்கட்டும் கார்த்திக் நரேன்.