புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
கபாலி, காலா படங்களுக்கு பிறகு அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பா.ரஞ்சித் இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் சார்பட்டா பரம்பரையின் இரண்டாம் பாகத்தை வெப் சீரிசாக இயக்க உள்ளார், பா.ரஞ்சித். இதனை படத்தை வெளியிட்ட ஓடிடி நிறுவனமே நேரடியாக தயாரிக்கிறது.
இதுகுறித்து பா.ரஞ்சித் கூறியிருப்பதாவது: சார்பட்டா பரம்பரை பற்றி ஒரு வெப் சீரீஸ் இயக்கும் திட்டம் உள்ளது. தமிழ்ப் பிரபா, பாக்கியம் சங்கர் உள்ளிட்ட சில எழுத்தாளர்களுடன் இணைந்து இதன் திரைக்கதையை உருவாக்கி வருகிறேன். சார்பட்டா பரம்பரையின் முன் கதையாக இருக்கும். அதாவது 1925ல் இருந்து தொடங்கும் கதையாக இருக்கும். இப்போதுதான் பணியை தொடங்கி இருக்கிறோம். அது இரண்டாம் பாகமா? வெப் சீரீசா என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியவில்லை. என்கிறார் பா.ரஞ்சித்.