ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
யாஷிகா ஆனந்த் சில நாட்களுக்கு முன்பு யாஷிகா நள்ளிரவில் நண்பர்களுடன் அதிவேகமாக காரில் பயணித்து வந்த போது கார் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் யாஷிகாவின் நண்பர் வள்ளிச் செட்டி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது ஆண் நண்பர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் யாஷிகாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அறுவை சிகிச்சை உள்ளாக்கப்பட்டார். தற்போது யாஷிகா உடல்நலம் தேறி வருகிறார்.
இந்நிலையில் யாஷிகாவுக்கு அறிவுரை கூறியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். அதில் "டார்லிங் இது யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். எனவே தான் நாம் இதை விபத்து என்கிறோம். ஜனனம் மற்றும் மரணம் இரண்டும் முன்பே தீர்மானிக்கப்பட்டது. யாரும் அதை மாற்ற முடியாது. எனவே நீயும் விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளாய். உனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு சம்பவத்திற்கு உன்னை நீயே குற்றம் சொல்வதை முதலில் நிறுத்து. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நினைப்பதை நிறுத்திவிடு. உன் மனசாட்சியை உறுதியாக வைத்துக் கொள். மற்றவற்றை நீயே கவனித்துக் கொள்ளலாம். இந்த கோர விபத்தில் இருந்து நீ தப்பித்து இருக்கிறாய் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்" என்று தெரிவித்துள்ளார்.