1000 கோடி வசூல் கனவுக்கு சிக்கல்: அதிர்ச்சியில் உச்ச நடிகர் | மதுரைகாரங்க பாசம்; சந்தோஷத்தில் சரண்யா | வித்தியாசம் இருந்தால் நிலைத்து நிற்கலாம்! சொல்கிறார் இல்லத்தரசிகளின் பிரியமான 'சுஜிதா' | நேருக்கு நேர் மோதும் கமல், சிம்பு! | மே 1 வெளியீடுகள்: எந்த ஆங்கிலப் பெயர் படத்திற்கு வரவேற்பு ? | ‛யாதும் அறியான்' பர்ஸ்ட் லுக் வெளியீடு | பிளாஷ்பேக்: “வேதாள உலகம்” வெற்றிக்குத் துணை நின்ற 'திருவிதாங்கூர்' சகோதரிகளின் நாட்டியம் | ராஜபார்ட் ரங்கதுரை, புதிய கீதை, விஸ்வாசம் - ஞாயிறு திரைப்படங்கள் | 'ரெட்ரோ' : ரொமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் |
அச்சமுண்டு அச்சமுண்டு படம் மூலம் இயக்குனரான அருண்வைத்தியநாதன், குழந்தைகளை மையமாக கொண்ட படம் ஒன்றை தயாரித்து இயக்க உள்ளார். அவர் கூறியதாவது: தமிழில் குழந்தைகளுக்கான படம் குறைவு. அவர்களுக்காக எடுத்தாலும், காதல், சண்டை காட்சிகள் அதில் இருக்கும். அவ்வாறு இல்லாமல், குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளை வைத்தே காட்டும் முயற்சி தான் இப்படம். அன்புக்கு ஒரு பஞ்சமில்லை என்பதே படத்தின் சாராம்சம். குழந்தைகளை மட்டுமின்றி அனைத்து வயதினரையும் கவரும். படத்தை முதலில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட உள்ளோம். நான்கு குழந்தைகள் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.