பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
கேளடி கண்மணி, பூவெல்லாம் கேட்டுப்பார், அப்பு, ரிதம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வஸந்த். இவர் இயக்கி உள்ள படம் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். இது அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை மையப்படுத்தி, எடுக்கப்பட்ட படம் . பார்வதி திருவோத்து, காளீஸ்வரி சீனிவாசன், லட்சுமி பிரியா, பத்மபிரியா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா படத்திற்கு இசையமைக்க, வஸந்தே படத்தை தயாரித்துள்ளார்.
படம் தயாராகி 3 ஆண்டுகளாகிறது. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றது. ஆனால் திரையரங்கில் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்திருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் முறையான அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது.