Advertisement

சிறப்புச்செய்திகள்

தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பா சொத்தை அழித்தேனா? : எஸ்.பி.பி சரண் கோபம்

03 ஆக, 2021 - 05:17 IST
எழுத்தின் அளவு:
SPB-Saran-clarification

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண். பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் தயாரிப்பாளர் ஆனது பணம் சம்பாதிக்கும் ஆசையில் அல்ல. சினிமா மீதுள்ள பற்றின் காரணமாக. உன்னை சரணடைந்தேன் படத்தை தயாரித்தேன். அதற்கு மாநில அரசு விருது கிடைத்தது. ஆனால் லாபம் வரவில்லை. தெலுங்கில் வெற்றி பெற்ற வர்ஷம் படத்தை தமிழில் மழை என்ற பெயரில் ரீமேக் செய்தேன். அதில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. தொழிலில் நஷ்டம் இயல்பானது என்று அப்பா ஆறுதல் சொன்னார்.

அதன்பிறகு வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்தை எடுத்தேன். படம் வெற்றி பெற்றது. ஆனால் எதிர்பார்த்த பணம் வரவில்லை. தொடர்ந்து ஆரண்ய காண்டம் படம் தயாரித்தேன். அது தேசிய விருதுகள் பெற்றது. பெயர், புகழ் வந்தது. ஆனால் பணம் வரவில்லை. நல்ல படங்கள் எடுத்தும் ஏன் அவற்றால் எனக்கு ஏன் இழப்பு ஏற்பட்டது என்று புரியவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

எங்களின் கோதண்டபாணி ஸ்டூடியோவிலும் வேலைகள் நடக்கவில்லை. இதை பார்த்தவர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இத்தனை வருஷம் சம்பாதித்து வைத்த பணத்தையெல்லாம் பையன் வந்து அழித்து அவரை திவாலாக்கிவிட்டான். எல்லா பணமும் போய்விட்டது. மொத்த சொத்தும் கரைந்துவிட்டது. இனிமேல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவ்வளவு தான்என்று பேசினார்கள். ஆனால் அப்பா, அம்மா ஆதரவாக இருந்தனர். மேடை கச்சேரிகள் தான் பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவின.

கொரோனாவால் அப்பாவை இழந்து வாழ்க்கை மீண்டும் சீர்குலைந்து விட்டது. தெலுங்கு டி.வி.யில் அப்பா தொகுத்து வழங்கிய பாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்னை அழைத்து உள்ளனர். இனிமேல் எனது தந்தை குரலில் கச்சேரிகளில் பாடவும் முடிவு செய்து இருக்கிறேன்.

இவ்வாறு எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடிக்கு வருகிறார்கள் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்ஓடிடிக்கு வருகிறார்கள் ... கூகுள் குட்டப்பா பர்ஸ்ட் லுக் வெளியீடு கூகுள் குட்டப்பா பர்ஸ்ட் லுக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in