இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ்நாட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கு சாதனை படைத்தவர் ஹேமமாலினி, அவர் உச்சத்தில் இருந்த காலத்தில் அவரைப்போன்ற தோற்றம் கொண்ட கன்னட நடிகை பத்மப்பிரியா 'தென்னகத்து ஹேமமாலினி' என்று கொண்டாடப்பட்டார்.
பெங்களூருவை சேர்ந்த பத்மப்பிரியா 1974ம் ஆண்டு 'அடபில்லலா தன்றி' என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கன்னடத்தில், 'பங்காரத குடி' படம் மூலம் அறிமுகமானார். இவர் 1970களின் பிற்பகுதியில் பிரபலமான நடிகையாக இருந்தார். 1978ம் ஆண்டு ஆபரேஷன் டயமண்ட் ராக்கெட், தாய்க்கே தக்க மகா, சங்கர் குரு ஆகிய மூன்று கன்னட படங்களில் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்தார், மூன்று படங்களுமே வெற்றி பெற்றது. இது இன்று வரை கன்னட சினிமாவில் சாதனையாக பார்க்கப்படுகிறது.
பத்மப்பிரியா தமிழில், 'காரோட்டி கண்ணன்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு வைர நெஞ்சம், மோகனப் புன்னகை, வாழ்ந்து காட்டுகிறேன், குப்பத்து ராஜா, ஆயிரம் ஜென்மங்கள், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் உள்பட பல படங்களில் நடித்தார். வைர நெஞ்சம் மற்றும் மோகனப் புன்னகை ஆகிய படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் 'தொட்டா சிணுங்கி'. அதில் இவர் அம்மா வேடத்தில் நடித்திருந்தார்.
1983ம் ஆண்டு சீனிவாசன் என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வசுமதி என்ற மகள் பிறந்தாள். திருமணமான ஒரு வருடத்திலேயே கணவரை பிரிந்த பத்மப்பரியா சினிமாவில் நடிப்பதை கைவிட்டு தனது பெற்றோடன் சென்னை தியாகராய நகரில் வசித்து வந்தார். 1997ம் ஆண்டு மரணம் அடைந்தார்.