சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
தமிழ்நாட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கு சாதனை படைத்தவர் ஹேமமாலினி, அவர் உச்சத்தில் இருந்த காலத்தில் அவரைப்போன்ற தோற்றம் கொண்ட கன்னட நடிகை பத்மப்பிரியா 'தென்னகத்து ஹேமமாலினி' என்று கொண்டாடப்பட்டார்.
பெங்களூருவை சேர்ந்த பத்மப்பிரியா 1974ம் ஆண்டு 'அடபில்லலா தன்றி' என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கன்னடத்தில், 'பங்காரத குடி' படம் மூலம் அறிமுகமானார். இவர் 1970களின் பிற்பகுதியில் பிரபலமான நடிகையாக இருந்தார். 1978ம் ஆண்டு ஆபரேஷன் டயமண்ட் ராக்கெட், தாய்க்கே தக்க மகா, சங்கர் குரு ஆகிய மூன்று கன்னட படங்களில் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்தார், மூன்று படங்களுமே வெற்றி பெற்றது. இது இன்று வரை கன்னட சினிமாவில் சாதனையாக பார்க்கப்படுகிறது.
பத்மப்பிரியா தமிழில், 'காரோட்டி கண்ணன்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு வைர நெஞ்சம், மோகனப் புன்னகை, வாழ்ந்து காட்டுகிறேன், குப்பத்து ராஜா, ஆயிரம் ஜென்மங்கள், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் உள்பட பல படங்களில் நடித்தார். வைர நெஞ்சம் மற்றும் மோகனப் புன்னகை ஆகிய படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் 'தொட்டா சிணுங்கி'. அதில் இவர் அம்மா வேடத்தில் நடித்திருந்தார்.
1983ம் ஆண்டு சீனிவாசன் என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வசுமதி என்ற மகள் பிறந்தாள். திருமணமான ஒரு வருடத்திலேயே கணவரை பிரிந்த பத்மப்பரியா சினிமாவில் நடிப்பதை கைவிட்டு தனது பெற்றோடன் சென்னை தியாகராய நகரில் வசித்து வந்தார். 1997ம் ஆண்டு மரணம் அடைந்தார்.