இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், பட்டியல், மிருகம் உட்பட பல படங்களில் நடித்தவர் பத்மபிரியா. இடையில் தமிழ், மலையாளம் இரண்டிலும் பத்மபிரியாவுக்கு வாய்ப்புகள் குறைந்ததால் நியூயார்க்குக்கு படிப்பதற்காக சென்றார். சென்ற இடத்தில் ஜாஸ்மின் ஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 2017 வரை தொடர்ந்து சினிமாவில் நடித்தவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். நடிகை ஒருவர் கடத்தப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து நடிகர் திலீப்புக்கு எதிராக குரல் கொடுத்து, மலையாள நடிகர் சங்கத்திலிருந்து விலகிய நடிகைகளின் இவரும் ஒருவர். அதன்பிறகு தான் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள கோப்ரா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பத்மபிரியா. இன்னொரு பக்கம் மலையாளத்தில் பிஜுமேனன் கதாநாயகனாக நடித்துள்ள ஒரு தெக்கன் தள்ளு கேஸ் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், விரைவில் இந்த படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த இரண்டு படங்களில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே அவரது இந்த ரீ என்ட்ரி வெற்றிகரமாக தொடரும் என எதிர்பார்க்கலாம்.