ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஆல்பம் இசை கலைஞராக இருந்து திரைப்பட இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தவர் ஹிப் ஆப் தமிழா ஆதி. அவர் தற்போது இயக்கி , நடித்து வரும் படம் சிவகுமாரின் சபதம். இதில் மாதுரி அவரது ஜோடியாக நடிக்கிறார். படத்தின் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில் ஒவ்வொரு பாடலாக வெளியிட்டு வருகிறார் ஆதி.
முதலில் வெளியிடப்பட்ட இரண்டு சிங்கிள் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாவது பாடலாக “நெருப்பா இருப்பான்” வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரொமாண்டிக் வகை பாடலை பத்மலதா பாடியுள்ளார். நாயகி (மாதுரி ) நாயகனை (ஆதி) காதலித்து, அவரது அழகை மற்றும் போற்றத்தக்க பண்பை, நினைந்துருகி பாடுவதாக வரும் பாடல் இது.
படத்திற்கு அருண்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர். விரைவில் வெளிவர இருக்கிறது.




