பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
தமிழில் தான் இயக்கி வந்த 'இந்தியன் 2' படம் நீதிமன்ற வழக்கில் இருப்பதால் அப்படத்தை அப்படியேவிட்டுவிட்டு, தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். அப்படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகளை தற்போது ஐதராபாத்தில் செய்து வருகிறார். படத்திற்கான பாடல் பதிவுகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இன்று படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 2016ல் வெளிவந்த 'எம்எஸ் தோனி' படம் மூலம் பிரபலமானவர் கியாரா. தொடர்ந்து சில தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது 'ஷெர்ஷா' என்ற ஹிந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். 'பூல் புலையா 2, ஜக் ஜக் ஜீயோ, மிஸ்டர் லீலி' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
ஷங்கர், ராம்சரண் முதல் முறையாக இணையும் புதிய தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்து ஷங்கர் ஹிந்தியில் இயக்க உள்ள 'அந்நிய்ன' படத்தின் ரீமேக்கிலும் கியாராதான் கதாநாயகி என்று ஏற்கெனவே செய்திகள் வெளி வந்துள்ளன. இரு படங்களுக்காகவும்தான் கியாராவை ஒப்பந்தம் செய்துள்ளார் ஷங்கர் என்கிறார்கள்.