காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தமிழ், தெலுங்கு மொழிகளில் நான்கு வருடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். கடந்த வருடம் கொரோனா அலையின் காரணமாக வழக்கமான மாதத்திலிருந்து சில மாதங்களுக்குப் பிறகுதான் நான்காவது சீசன் நிகழ்ச்சி நடந்தது.
இந்த வருடத்திற்கான ஐந்தாவது சீசன் தெலுங்கில் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது. அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம். செப்டம்பர் முதல் வாரத்தின் நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம் என்கிறார்கள். இந்த சீசனையும் நடிகர் நாகார்ஜுனா தான் தொகுத்து வழங்கப் போகிறார்.
தமிழில் கமல்ஹாசன் இந்த வருட 5வது சீசனைத் தொகுத்து வழங்க தேர்தலுக்கு முன்பாகவே அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தமிழில் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் ஆரம்பமாகியதா இல்லையா என்பது குறித்து தகவல் இல்லை.
சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் தான் நிகழ்ச்சிக்கான அரங்கம் இருக்கிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் அங்கு மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி அனுமதியில்லாமல் நடத்தப்பட்டது தெரிந்ததும் அந்த ஸ்டுடியோவுக்கு அரசு தரப்பில் 'சீல்' வைத்தார்கள். மலையாள பிக்பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் ஒளிபரப்பு அப்படியே நிறுத்தப்பட்டது.
அந்த 'சீல்' விவகாரத்தை முடித்த பிறகுதான் தமிழில் 5வது சீசன் பற்றி தகவல் வெளிவரும் என்கிறார்கள்.