புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்கு நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரப்போவதால் நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் விஷ்ணு மஞ்சு, நடிகை ஜீவிதா உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தனர். இதனால் பிரச்சாரங்கள் சூடு பறந்த நிலையில் பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடர் என்கிற வாதம் முன் வைக்கப்பட்டதால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவு குரல்களும் ஒலித்தன. இந்த நிலையில், பிரகாஷ்ராஜூம்,விஷ்ணு மஞ்சும் தங்கள் அணிகள் வெற்றி பெற்றால் நடிகர் சங்கத்துக்கு என்னென்ன நலத்திட்டங்களை செய்வோம் என்பது குறித்த வாக்குறுதிகளை அளிப்பதில் போட்டா போட்டியிலும் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது திடீரென்று அமைதியாகி விட்ட நடிகர் பிரகாஷ்ராஜ், இனிமேல் நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் பிரச்சாரம் மட்டுமின்றி தேர்தல் வாக்குறுதி சம்பந்தமாகவும் பேசுவேன் என்று கூறி வருகிறாராம். அதன்காரணமாக மற்றவர்கள் தனக்கு எதிராக வெளியிடும் அறிக்கைகளுக்கும் எந்தவித பதிலும் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.