ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படம் சின்னத்திரையிலும், ஓடிடியிலும் வெளியாவதாக வந்த தகவலை தொடர்ந்து மேலும் ஒரு படம் ஓடிடியில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ளார். இதில் அவருடன் டாப்ஸி, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கொரோனாவின் முதல் அலை முடிந்திருந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு விட்டது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
படத்தில் டாப்ஸி நடித்திருப்பதால் படத்தை இந்தியில் வெளியிடவும் ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.