துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனா. திரைப்படங்களில் நடித்தும் வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூளைக்கு அருகே ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஆபரேஷன் முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி உள்ளார்.
இது தொடர்பாக அர்ச்சனா கூறுகையில், அர்ச்சனா எப்படி இருக்காங்கன்னு எல்லாரும் கேட்கிறாங்க. அர்ச்சனா ஒரு தொகுப்பாளினி தான் ஆனால் அவளுக்காக எல்லாரும் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களுக்கு எனது நன்றி. என்னை குணப்படுத்திய மருத்துவமனைக்கு நன்றி. கொரோனா பரிசோதனைக்காகத்தான் ஆஸ்பத்திரிக்கு போனேன். ஆனால் 24 மணி நேரத்தில் பல பரிசோதனைகள் செய்து மூளையில் இருக்கும் பிரச்சினையை கண்டுபிடித்தார்கள்.
வாழ்க்கையில் நாளை என்பதில்லை. இன்றைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் நான் உணர்ந்தது. யாரையும் வெறுக்காதீர்கள், எல்லோர் மீதும் அன்பு செலுத்துங்கள். கடவுளால் எல்லா இடத்திலும் இருக்க முடியாது. அதனால் தனது தூதர்களாக டாக்டர்களையும், செவிலி தாய்களையும் அவர் படைத்துள்ளார். இது இறைவன் எனக்கு கொடுத்த மறுஜென்மம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.