தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி என்ற திறமையான கதாநாயகன் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் தான் கதாநாயகனாக உயர்ந்தார் விஜய் சேதுபதி.
அந்த 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் என்.ஆர்.ரகுநந்தன். அதன்பின் சீனு ராமசாமி இயக்கிய 'நீர்ப்பறவை' படத்திற்கும் இசையமைத்தார். அதற்கடுத்து அந்தக் கூட்டணி பிரிந்தது.
சீனு ராமசாமி அதற்குப் பிறகு இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைத்தார். தொடர்ந்து 'தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன்' என யுவனுடன்தான் பயணித்தார் சீனு. 'மாமனிதன்' படத்திற்கு அப்பா இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கிறார் யுவன்.
இப்போது, அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சீனு ராமசாமி. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு மீண்டும் என்.ஆர்.ரகுநந்தனை இசையமைக்க வைக்கிறார். நான்கு பட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளனர்.
'மாமனிதன்' படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கும் யுவனுக்கும், சீனுவுக்கும் அந்தப் படத்தில் பிரச்சினை என கிசுகிசுக்கிறது கோலிவுட். அதன் காரணமாகத்தான் மீண்டும் தன்னால் அறிமுகமான ரகுநந்தனை கூட்டணி சேர்த்துக் கொண்டுள்ளார் என்கிறார்கள்.