300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
விஜய்சேதுபதி, காயத்ரி நடித்த மாமனிதன் படத்தின் அறிமுக நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீனு ராமசாமி, இளையராஜா என்னை காரணமே இல்லாமல் நிராகரத்தார். ஒரு இயக்குனராக என்னை மதிக்கவில்லை. ரீ-ரெக்கார்டிங் பணிக்கும், பாடல் ஒலிப்பதிவு பணிக்கும் என்னை அழைக்கவில்லை. அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கூடா நட்பில் இருக்கிறார் என்று விமர்சித்து பேசினார்.
இந்த நிலையில் சீனு ராமசாமி தனது கருத்தில் அந்தர்பல்டி அடித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது : இசைஞானியிடம் எனது அன்பை உணர்த்த வழியறியாத நான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதை உரைத்தேன். அதை பயன்படுத்தி சிலர் அவரை சிறுமை செய்யத் துணிவது மேலும் வருத்தமளிக்கிறது, அது என் நோக்கத்திற்கு எதிரானது. மாமனிதன் அவரது புகழ் பாடும், அவர் மீதான என் அன்பை பேசும். என்று பதிவிட்டுள்ளார்.