ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் விஷால் - து.பா.சரவணன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. விஷாலின் 31வது படமாக உருவாகும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
கொரானா ஊடரங்கு தளர்வு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்டிருந்தார் விஷால் இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.
இதில் விஷாலை ஒருவர் தாக்க, பின்புறமாக ஒரு இடத்தில் சாய்ந்து விழுகிறார். அப்போது முதுகில் காயம் ஏற்பட்டு வலியால் துடிக்கிறார் விஷால். அதன்பிறகு உடனடியாக மருத்துவர் அணுகி பரிசோதித்த பிறகு பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பு சிறிது நேரம் தடைப்பட்டது.