ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தற்போது திரை வடிவமாக்கிக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிகர் நடிகைகள் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், மலையாள நடிகரான ஜெயராம் இப்படத்தில் நடிக்கும் கேரக்டர் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வனில் மொட்டைத்தலையுடன் குடுமி வைத்தபடி தான் நடிக்கும் கெட்டப்பில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப் படத்தை கார்த்தி, ஜெயம்ரவியுடன் இணைந்து எடுத்து அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஜெயராம்.
அதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயராம் ஆழ்வார்க்கடியான் என்ற நகைச்சுவை கலந்த வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.