ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
ஹீரோ, வில்லன் என மாறுபட்ட கோணங்களில் தன்னை வெளிப்படுத்தி வருபவர் விஜய் சேதுபதி. அதோடு தற்போது அவர் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார். இந்த நிகழ்ச்சியின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது : என்னைப் பொறுத்தவரை திரைப்படங்கள், வெப்சீரிஸ் இரண்டையுமே ஒரே மாதிரியாகத் தான் நினைக்கிறேன். ஒரே மாதிரியான நடிப்பைத்தான் வெளிப்படுத்துகிறேன் என்றார்.
ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடிக்கிறீர்கள்? உங்களது இலக்கு எதை நோக்கி செல்கிறது? என்ற கேள்விக்கு ‛‛எனது வாழ்க்கையில் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்ற எந்த திட்டமிடலும் இல்லை. என் இதயம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட்டு வருகிறேன். நான் எடுக்கும் முடிவுகள் தவறாக இருந்தாலும் அதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொள்கிறேன்'' என்றும் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.