சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி |
தென்னிந்தியத் திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குனர் என கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பெயர் பெற்றுள்ளவர் ஷங்கர். அவருடைய முதல் படமான 'ஜென்டில்மேன்' படத்திலேயே தென்னிந்தியத் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர். அவருடைய பல படங்கள் இங்குள்ள இயக்குனர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளன. தற்போது ராஜமவுலி போன்ற இயக்குனர்கள் பிரம்மாண்டத்தை வேறு விதமாகக் காட்டினாலும் அவர்களுக்கெல்லாம் முன்னோடி ஷங்கர் தான்.
ஷங்கர் அடுத்து தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்திற்கு சாய் மாதவ் புர்ரா என்பவர் தான் வசனம் எழுதியுள்ளார். ஷங்கர் படத்திற்கு வசனம் எழுதுவது குறித்து, “ஜென்டில்மேன்' படம் வெளியான போது, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கனவாக இருந்தேன். இன்று, அவருடைய படத்திற்கு நான் வசனம் எழுதுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல வெற்றிகரமான தெலுங்குப் படங்களுக்கு வசனம் எழுதியவர் சாய் மாதவ். “ஆர்ஆர்ஆர், சாகுந்தலம், பிரபாஸ் - நாக் அஷ்வின் இணையும் படம் ஆகியவற்றிற்கு இவர்தான் வசனம் எழுதி வருகிறார்.