துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தென்னிந்தியத் திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குனர் என கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பெயர் பெற்றுள்ளவர் ஷங்கர். அவருடைய முதல் படமான 'ஜென்டில்மேன்' படத்திலேயே தென்னிந்தியத் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர். அவருடைய பல படங்கள் இங்குள்ள இயக்குனர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளன. தற்போது ராஜமவுலி போன்ற இயக்குனர்கள் பிரம்மாண்டத்தை வேறு விதமாகக் காட்டினாலும் அவர்களுக்கெல்லாம் முன்னோடி ஷங்கர் தான்.
ஷங்கர் அடுத்து தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்திற்கு சாய் மாதவ் புர்ரா என்பவர் தான் வசனம் எழுதியுள்ளார். ஷங்கர் படத்திற்கு வசனம் எழுதுவது குறித்து, “ஜென்டில்மேன்' படம் வெளியான போது, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கனவாக இருந்தேன். இன்று, அவருடைய படத்திற்கு நான் வசனம் எழுதுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல வெற்றிகரமான தெலுங்குப் படங்களுக்கு வசனம் எழுதியவர் சாய் மாதவ். “ஆர்ஆர்ஆர், சாகுந்தலம், பிரபாஸ் - நாக் அஷ்வின் இணையும் படம் ஆகியவற்றிற்கு இவர்தான் வசனம் எழுதி வருகிறார்.