'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி | பிளாஷ்பேக்: சினிமாவில் சிவகுமாரின் 60வது ஆண்டு: தீராத அந்த இரண்டு ஏக்கங்கள் | ராணாவை நள்ளிரவில் எழுப்பிய கட்டப்பா ; 'ராணா நாயுடு' வெப் சீரிஸுக்கு வித்தியாசமான புரமோஷன் |
சிவசக்தி மூவி மேக்கர்ஸ் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில், அகத்தியன் இயக்கத்தில், தேவா இசையமைப்பில், அஜித், தேவயானி மற்றும் பலர் நடித்து ஜுலை 12, 1996ம் ஆண்டு வெளிவந்த படம் 'காதல் கோட்டை'.
தமிழ் சினிமாவில் அஜித்திற்கு ஒரு ஹீரோவாக மிகப் பெரும் திருப்புமுனையைக் கொடுத்த படம் இது. அப்படம் வெளிவந்து 25 ஆண்டு முடியப் போகிறது. அதைக் கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் இன்று 'காதல் கோட்டை' படக்குழுவினருக்காக சிறப்பு சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் அஜித் கலந்து கொள்வாரா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
இந்த சந்திப்பு பற்றி 'காதல் கோட்டை' படத்தின் ஒளிப்பதிவாளரான தங்கர் பச்சான் அவரது முகப்புத்தகத்தில் , "காதல் கோட்டை" திரைப்படம் வெளியாகி நாளையுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய எட்டாவது படம். படத்தை உருவாக்க எங்கள் குழு பணியாற்றிய நாட்களை பின்னோக்கி அசை போடுகின்றேன். நாளை காலை பதினோரு மணி அளவில் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிப்புக் கலைஞர்கள் சந்திப்பை நான் வணங்கும் நண்பர், தயாரிப்பாளர் திரு. சிவசக்தி பாண்டியன் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார். மீண்டும் பழைய நண்பர்களுடன் பழைய நாட்களுக்குச்சென்று உரையாடி கலந்து மகிழும் அந்நேரத்திற்காகக் காத்திருக்கிறேன்,” என பதிவிட்டுள்ளார்.
'காதல் கோட்டை' படத்திற்குப் பிறகு அப்படத்தின் தயாரிப்பாளரின் தயாரிப்பிலோ, இயக்குனர் அகத்தியன் இயக்கத்திலோ அஜித் மீண்டும் நடிக்கவேயில்லை.