பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | 'மார்கோ' படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பகூடாது : மத்திய தணிக்கை வாரியத்துக்கு கேரள அதிகாரி கடிதம் | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை | சிங்கமுத்து மீதான வழக்கு : வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர் | பிளாஷ்பேக்: “இதயக்கனி” திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சியின் பின்னணி | லண்டனில் சிம்பொனி இசை ; இது என் பெருமை அல்ல... நாட்டின் பெருமை : இளையராஜா | அஜித், கமல்ஹாசன் வழியில் நயன்தார : அடுத்தது யார் ? | படக்குழு மட்டும் கொண்டாடிய 'டிராகன்' சக்சஸ் பார்ட்டி | இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு அனஸ்வரா ராஜன் பதிலடி ; நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்தார் |
தி கிரேமேன் படத்தை முடித்துவிட்ட தனுஷ் அடுத்தபடியாக கார்த்திக் நரேன் இயக்கும் தனது 43ஆவது படத்தில் ஐதராபாத்தில் முகாமிட்டு நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் தனுஷ். மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்தநிலையில், மீண்டுமொரு தெலுங்கு படத்திலும் தனுஷ் நடிப்பதாக தற்போது இன்னொரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் அந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நாக வம்சி தயாரிக்கிறார். அவரும் தனுஷை ஐதராபாத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். அந்த படத்தை தெலுங்கில் தொலி பிரேமா, மிஸ்டர் மஜ்னு, ரங்தே போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்குகிறாராம். இது குறித்த தகவலை விரைவில் தனுஷ் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.