ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் ‛தி பேமிலி மேன் 2 வெப்சீரிஸ் நடித்தார். இந்த தொடருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அதேசமயம் பிறமொழிகளில் சமந்தாவின் நடிப்பை பாராட்டினர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் தான் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்து வேதனை அடைந்துள்ளார் சமந்தா.
இதுப்பற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சமூகவலைதளங்களில் வரும் விமர்சனங்கள், சீண்டல்களை எதிர்கொள்வது சாதாரண விஷயம் அல்ல. யாரோ ஒருவர் சொல்கிறார் என கடந்து செல்ல முடியாது. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும்போது மனம் மிகவும் வலிக்கிறது. சினிமாவில் பல ஆண்டுகளாக இருப்பதால் இதை கடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தன்னம்பிக்கையாலேயே இவற்றையெல்லாம் சமாளித்து வருகிறேன் என்கிறார் சமந்தா.




