இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். பிற்காலத்தில் கொலை வழக்கில் சிறைக்கு சென்று, சொந்த படம் தயாரித்து பணத்தை இழந்து மறைந்தார். அவரது சமாதி திருச்சியில் உள்ளது. அவரது குடும்பத்தினரும் திருச்சியில் வாழ்ந்து வருகிறார்கள்.
தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்றுப் பேரன் சாய்ராம் என்பவர் முதல்வரின் தனி பிரிவில் மனு கொடுத்தார். அந்த மனுவில் "எனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதரின் 2வது மனைவி ராஜம்மாள். அவர்களின் மகள் அமிர்தலட்சுமி - பாஸ்கர் ஆகிய தம்பதியின் மகன் நான். எனக்கு அண்ணன், தம்பி, தங்கை உள்ளனர். நாங்கள் 4 பேரும் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் இல்லை. பாட்டிதான் எங்களை வளர்த்தார்.
நான் புகைப்பட கலைஞராக பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றி வந்தேன். தற்போது கொரோனா காலத்தில் தொழில் முடங்கி மிகவும் வறுமையில் வாடுகிறேன். செக்யூரிட்டி வேலை செய்கிறேன். சாப்பிட வழியில்லை. வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இவரது கோரிக்கையை ஏற்று, முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு மற்றும் ரூபாய் 5 லட்சம் நிதி உதவியை அறிவித்தார். அதன்படி இன்று தலைமை செயலகத்தில் உதவி தொகை மற்றும் அரசு குடியிருப்புக்கான வீட்டு சாவியை முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்டார் தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராம்.