இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். பிற்காலத்தில் கொலை வழக்கில் சிறைக்கு சென்று, சொந்த படம் தயாரித்து பணத்தை இழந்து மறைந்தார். அவரது சமாதி திருச்சியில் உள்ளது. அவரது குடும்பத்தினரும் திருச்சியில் வாழ்ந்து வருகிறார்கள்.
தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்றுப் பேரன் சாய்ராம் என்பவர் முதல்வரின் தனி பிரிவில் மனு கொடுத்தார். அந்த மனுவில் "எனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதரின் 2வது மனைவி ராஜம்மாள். அவர்களின் மகள் அமிர்தலட்சுமி - பாஸ்கர் ஆகிய தம்பதியின் மகன் நான். எனக்கு அண்ணன், தம்பி, தங்கை உள்ளனர். நாங்கள் 4 பேரும் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் இல்லை. பாட்டிதான் எங்களை வளர்த்தார்.
நான் புகைப்பட கலைஞராக பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றி வந்தேன். தற்போது கொரோனா காலத்தில் தொழில் முடங்கி மிகவும் வறுமையில் வாடுகிறேன். செக்யூரிட்டி வேலை செய்கிறேன். சாப்பிட வழியில்லை. வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இவரது கோரிக்கையை ஏற்று, முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு மற்றும் ரூபாய் 5 லட்சம் நிதி உதவியை அறிவித்தார். அதன்படி இன்று தலைமை செயலகத்தில் உதவி தொகை மற்றும் அரசு குடியிருப்புக்கான வீட்டு சாவியை முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்டார் தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராம்.