இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம் (70). கடந்த 50 ஆண்டுகளாக பல நாடுகளில், பல மேடை கச்சேரிகளில் பாடி வருகிறார். மத்திய அரசின் பத்மஸ்ரீ, மாநில அரசுகளின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். சங்கீத நாடக அகாடமியின் துணை தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில் இசையில் இவரது திறமையை கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலிய விருதை வழங்குவதாக அறிவித்துள்ளார். பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய - பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
இதுபற்றி அருணா சாய்ராம் கூறுகையில், ‛‛இதுபோன்ற உயரிய விருது பெறுவதில் மகிழ்ச்சி. நான் செய்யும் பணியை மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கூடுதல் பொறுப்பையும் இந்த விருது வழங்குகிறது. பிரான்ஸ் அரசுக்கு நன்றி'' என்றார்.