மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபல கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம் (70). கடந்த 50 ஆண்டுகளாக பல நாடுகளில், பல மேடை கச்சேரிகளில் பாடி வருகிறார். மத்திய அரசின் பத்மஸ்ரீ, மாநில அரசுகளின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். சங்கீத நாடக அகாடமியின் துணை தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில் இசையில் இவரது திறமையை கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலிய விருதை வழங்குவதாக அறிவித்துள்ளார். பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய - பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
இதுபற்றி அருணா சாய்ராம் கூறுகையில், ‛‛இதுபோன்ற உயரிய விருது பெறுவதில் மகிழ்ச்சி. நான் செய்யும் பணியை மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கூடுதல் பொறுப்பையும் இந்த விருது வழங்குகிறது. பிரான்ஸ் அரசுக்கு நன்றி'' என்றார்.