மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படுவது செவாலியே விருதாகும். இந்த விருதை ஏற்கெனவே சிவாஜி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரையுலக ஆளுமைகள் பெற்றிருக்கிறார்கள். இந்த வரிசையில் தற்போது பிரபல கர்நாடக இசை பாடகி அருணா சாய்ராம் செவாலியே விருது பெற்றுள்ளார். இந்தியா - பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக இசை உலகின் 'ராக் ஸ்டார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அருணா சாய்ராம் அவ்வப்போது திரைப்பட பாடல்களையும் பாடி உள்ளார். கடைசியாக ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' படத்தில் பாடியிருந்தார். பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி உள்ளிட்ட விருதுகளை இதுவரை பெற்றுள்ளார் அருணா சாய்ராம்.
“நான் நடிகர் சிவாஜி கணேசனின் பெரிய ரசிகை; அவரது படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். அவர் பெற்ற விருதை நானும் பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அதை கவுரவமாக கருதுகிறேன். எனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.