மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படுவது செவாலியே விருதாகும். இந்த விருதை ஏற்கெனவே சிவாஜி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரையுலக ஆளுமைகள் பெற்றிருக்கிறார்கள். இந்த வரிசையில் தற்போது பிரபல கர்நாடக இசை பாடகி அருணா சாய்ராம் செவாலியே விருது பெற்றுள்ளார். இந்தியா - பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக இசை உலகின் 'ராக் ஸ்டார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அருணா சாய்ராம் அவ்வப்போது திரைப்பட பாடல்களையும் பாடி உள்ளார். கடைசியாக ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' படத்தில் பாடியிருந்தார். பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி உள்ளிட்ட விருதுகளை இதுவரை பெற்றுள்ளார் அருணா சாய்ராம்.
“நான் நடிகர் சிவாஜி கணேசனின் பெரிய ரசிகை; அவரது படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். அவர் பெற்ற விருதை நானும் பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அதை கவுரவமாக கருதுகிறேன். எனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.