100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படுவது செவாலியே விருதாகும். இந்த விருதை ஏற்கெனவே சிவாஜி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரையுலக ஆளுமைகள் பெற்றிருக்கிறார்கள். இந்த வரிசையில் தற்போது பிரபல கர்நாடக இசை பாடகி அருணா சாய்ராம் செவாலியே விருது பெற்றுள்ளார். இந்தியா - பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக இசை உலகின் 'ராக் ஸ்டார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அருணா சாய்ராம் அவ்வப்போது திரைப்பட பாடல்களையும் பாடி உள்ளார். கடைசியாக ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' படத்தில் பாடியிருந்தார். பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி உள்ளிட்ட விருதுகளை இதுவரை பெற்றுள்ளார் அருணா சாய்ராம்.
“நான் நடிகர் சிவாஜி கணேசனின் பெரிய ரசிகை; அவரது படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். அவர் பெற்ற விருதை நானும் பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அதை கவுரவமாக கருதுகிறேன். எனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.