சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
ஒரு இயக்குனருக்கு, வெற்றி தான் அடுத்த வாய்ப்பை தீர்மானிக்கும் என்பது போல, தர்பார் படத்தை வெற்றிப் படமாக கொடுக்க தவறியதால், அடுத்து தமிழில் கிடைக்க இருந்த விஜய் படமும் ஏ.ஆர்.முருகதாஸுக்குக்கு கை நழுவி போனது. இதனால் தெலுங்கு திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார் முருகதாஸ். அல்லு அர்ஜுனுக்கு கதைசொல்லி அவரிடம் சம்மதமும் பெற்றுவிட்டார்.
தற்போது புஷ்பா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதை முடித்ததும் வக்கீல் சாப் படத்தை இயக்கிய வேணு ஸ்ரீராம் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் வேணு ஸ்ரீராம் படத்தில் நடிப்பது உண்மைதான் என்றாலும், தற்போது முருகதாஸ் படத்திற்கு தான் அல்லு அர்ஜூன் முன்னுரிமை கொடுக்க விரும்புகிறாராம். அதனால் புஷ்பா படப்பிடிப்பு முடிவடைந்ததும் முருகதாஸ் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டு அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம் அல்லு அர்ஜுன். அதற்கான தீவிரமான வேலைகளில் முருகதாஸ் தற்போதே இறங்கி விட்டாராம்.