மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஒரு இயக்குனருக்கு, வெற்றி தான் அடுத்த வாய்ப்பை தீர்மானிக்கும் என்பது போல, தர்பார் படத்தை வெற்றிப் படமாக கொடுக்க தவறியதால், அடுத்து தமிழில் கிடைக்க இருந்த விஜய் படமும் ஏ.ஆர்.முருகதாஸுக்குக்கு கை நழுவி போனது. இதனால் தெலுங்கு திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார் முருகதாஸ். அல்லு அர்ஜுனுக்கு கதைசொல்லி அவரிடம் சம்மதமும் பெற்றுவிட்டார்.
தற்போது புஷ்பா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதை முடித்ததும் வக்கீல் சாப் படத்தை இயக்கிய வேணு ஸ்ரீராம் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் வேணு ஸ்ரீராம் படத்தில் நடிப்பது உண்மைதான் என்றாலும், தற்போது முருகதாஸ் படத்திற்கு தான் அல்லு அர்ஜூன் முன்னுரிமை கொடுக்க விரும்புகிறாராம். அதனால் புஷ்பா படப்பிடிப்பு முடிவடைந்ததும் முருகதாஸ் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டு அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம் அல்லு அர்ஜுன். அதற்கான தீவிரமான வேலைகளில் முருகதாஸ் தற்போதே இறங்கி விட்டாராம்.