மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
'ஜகமே தந்திரம்' படத்தை அடுத்து தமிழில் தனுஷ் தன்னுடைய 43வது படத்தில் நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் 'த கிரே மேன்' படத்தில் நடிப்பதற்காக இப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கு படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் அடுத்த சில தினங்களில் அவர் இந்தியா திரும்புவார் எனத் தெரிகிறது.
தனுஷ் 43வது படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் மீண்டும் ஆரம்பமாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பு சென்னையில் இல்லையாம், ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாகச் சொல்கிறார்கள்.
தமிழ்ப் படங்கள் பலவற்றின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களாகவே ஐதராபாத்தில் தான் அதிகம் நடக்கிறது. ரஜினிகாந்த், அஜித், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அவர்களது படங்களின் படப்பிடிப்பை அங்கு தான் அதிகம் நடத்துகிறார்கள். அந்த வரிசையில் தற்போது தனுஷும் இணைகிறார்.
தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தால் மட்டுமே இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால், ஐதராபாத்தில் நடத்தினால் அங்குள்ள தொழிலாளர்கள்தான் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். அதை மனத்தில் வைத்து நடிகர் விஜய் மட்டும் தான் தனது படப்பிடிப்பை பெரும் பகுதி சென்னையில் வைத்துக் கொள்வார் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
கொரோனா காரணமாக கடந்த ஒரு வருடமாகவே சென்னையைச் சேர்ந்த திரைப்படத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்துவது குறித்து இங்குள்ள தொழிலளார்கள் கோபமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.