'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அந்த படத்தின் வெற்றியை பெரிய அளவில் எதிர்பார்த்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், முருகதாஸிற்கு அடுத்த படம் கிடைப்பதிலும் முட்டுக்கட்டை போட்டுவிட்டது. பெரிய நடிகர்களை வைத்தே இயக்கி பழக்கப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ், மீண்டும் தனது நட்பு கூட்டணியில் உள்ள விஜய்யை வைத்து படம் இயக்கும் எண்ணத்துடன், அவரிடம் ஒரு கதையை கூறினார். ஆனால் அந்த கதையில் விஜய்க்கு திருப்தி இல்லாததால் அதை நிராகரித்து விட்டார்.
இந்தநிலையில் தற்போது அதே கதையை நடிகர் கமலை வைத்து முருகதாஸ் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன. ஒரு காலத்தில் திரையுலகில் மும்மூர்த்திகளாக வலம் வந்தவர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோர். இதில் இன்னும் கமலை மட்டும் வைத்து படம் இயக்காமல் உள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அதேசமயம் தற்போதைய இளம் நடிகர்களில் மும்மூர்த்திகளாக கருதப்படும் விஜய், அஜித், சூர்யா மூவரது படங்களையும் இயக்கிவிட்ட முருகதாஸுக்கு கமல் படத்தையும் இயகிவிட்டால் அவரது மனக்குறையும் தீர்ந்துவிடும்.. அவரது திரையுலக பயணமும் முழுமை அடைந்தது போல் ஆகிவிடும்.. ஆனால் கமல் கைவசம் உள்ள படங்கள் ஏதோ ஒரு விதத்தில் தாமதமாகி வருவதால், கமல்-முருகதாஸ் கூட்டணி ஒர்க் அவுட் ஆகுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.