கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்கு பின்னர் 'பாவகதைகள்' என்ற ஆந்தாலஜி படத்தில் பணியாற்றிய விக்னேஷ் சிவன், தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அவருடன் சமந்தா, நயன்தாரா இருவரும் நடிக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்துக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி - நயன்தாரா இணையும் இரண்டாவது படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி ஐதராபாத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். இந்த படத்திலிருந்து வெளியான முதல் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது படத்தின் இரண்டாம் பாடலை படக்குழு விரைவில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தை முடிப்பதற்கு இன்னும் சில காட்சிகளே படமாக்கப்பட வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை விடுமுறையின் போது படத்தை வெளியிட திட்டமிட்டு படத்தின் பணிகளை வேகப்படுத்தி உள்ளனர்.