கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் பெற்றவர் ஷங்கர். ஜென்டில்மேன், காதலன், இந்தியன், முதல்வன் முதல் எந்திரன், 2.0 வரை தமிழ் சினிமாவை சரவ்தேச அளவில் கவனிக்க வைத்தவர். ஷங்கர் அடுத்து இந்தியன் 2 படத்தை கமல்ஹாசன் நடிப்பில் இயக்கி வருகிறார். அடுத்து தெலுங்கு முன்னணி நடிகர் ராம்சரண் நடிப்பில் ஒரு படத்தையும் இயக்க இருக்கிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மருத்துவரான ஐஸ்வர்யா ஷங்கர் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித்தை மணக்க இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன்தான் இந்த ரோகித். 29 வயதான ரோகித், தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் விளையாட இடம் கிடைக்காததால் 2015-ல் இலங்கைக்குச் சென்று விளையாடியவர். அதன்பிறகு தந்தை தாமோதரனின் முயற்சியால் புதுச்சேரி ரஞ்சி அணி தொடங்கப்பட்டு அதற்கு கேப்டனாகவும் மாறினார்.
நடப்பு சீசனில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மும்பைக்கு எதிரானப் போட்டியில் புதுச்சேரி அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று அதிகபட்ச ஸ்கோராக 63 ரன்கள் அடித்திருந்தார். ஐஸ்வர்யா - ரோகித் திருமணம் வரும் 27ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் எளிமையாக நடக்க இருக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.