மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பீஹாரில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன் படம் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2019ல் தகுதி தேர்வு நடந்தது. அதற்கான முடிவுகள் கடந்த ஆண்டு மார்ச்சில் வெளியிடப்பட்டன. சில தொழில்நுட்ப பிரச்னைகளால், மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது. அவை சரி செய்யப்பட்டதாக அரசு இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ரிஷிகேஷ் குமார் என்ற மாணவர் உருது, சமஸ்கிருதம், அறிவியல் அடங்கிய, முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இணையதளத்தில் அந்த மாணவரின் பதிவு எண், மதிப்பெண் என, அனைத்து விவரங்களும் சரியாக உள்ளன. ஆனால், ரிஷிகேஷின் படத்துக்கு பதிலாக, மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ள. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
பீஹாரில் எந்த நியமனமும் மோசடியில்லாமல் நிரப்பப்படுவதில்லை, என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கடந்த 2016இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தெலுங்கில் நடிப்பவர், தமிழில் கொடி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.