பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
தமிழ் சினிமாவில் எவ்வளவோ படங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன. சில பெரிய நடிகர்களின் படங்களே கூட படுதோல்வி அடைந்து பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்த 'அஞ்சான்' படத்தின் தோல்வியைப் பற்றி இன்னமும் பலர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சமீபத்தில் கூட 'ஜகமே தந்திரம்' படம் வெளிவந்த போது கூட ரஜினிகாந்திற்கு 'பாபா', விஜய்க்கு 'சுறா', சூர்யாவுக்கு 'அஞ்சான்' போல தனுஷுக்கு 'ஜகமே தந்திரம்' என சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தார்கள்.
'அஞ்சான்' தோல்வியிலிருந்து மீண்டு 'சண்டக்கோழி 2' படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தாலும் அப்படமும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் எப்படியோ தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டார்.
இன்று அப்படத்தைப் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ராம். டுவிட்டரில், “கடைசி கட்ட கதை முடிந்தது. எப்படி... லிங்குசாமி சார் லவ் யூ, சூப்பர் டூப்பர் கிக்டு....நான் சொல்றேன் கேமராவை ரோல் பண்ணுங்க,” என பெரும் உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க 'உப்பெனா' நாயகி கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.