தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தெலுங்குத் திரையுலகத்தில் க்யூட் ஹீரோயின் எனப் பெயரெடுத்த கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தானா, தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' படத்தின் மூலம் அறிமுகமானார்.அடுத்து ஹிந்தியில் 'மிஷன் மஞ்சு, குட்பை' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். மேலும், சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதனால், ஹிந்தியில் அதிக கவனம் செலுத்துவதற்காக மும்பைக்கே குடியேறிவிட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் மும்பையில் சொந்தமாக ஒரு பிளாட் வாங்கியதாக செய்திகள் வெளிவந்தன. அங்கேயே குடியேறிவிட்டாரா அல்லது வாடகை வீட்டிற்குச் சென்றுள்ளாரா என்பது குறித்து தகவல் இல்லை.
தெலுங்கில் பிஸியான போது ஐதராபாத்திலும் ஒரு வீடு, புது கார் என வாங்கினார் ராஷ்மிகா. தற்போது தெலுங்கை விட்டு ஹிந்திக்குச் சென்றதும் அங்கும் வீடு வாங்கி செட்டிலாகியுள்ளார். மும்பை வாசம் நிரந்தரமா அல்லது தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க வருவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.
பாலிவுட் சென்ற தென்னிந்திய நடிகைகள் தாங்கள் வளர்ந்த மொழிப் பக்கம் மீண்டும் திரும்பிப் பார்த்ததில்லை என்பது தான் கடந்த கால வரலாறு.