இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
பெருகி வரும் நகர்புற நெரிசலுக்கு இடையில் மாடித் தோட்டம் அமைப்பது பெருகி வருகிறது. வாய்ப்புள்ள அனைருமே தங்கள் வீட்டு மொட்டை மாடியில் மாடித் தோட்டம் அமைத்திருக்கிறார்கள். நடிகைகள் சுஹாசினி, குஷ்பு, நடிகர் மாதவன் போன்றவர்கள் இதில் மும்முரமாக இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் இப்போது சிவகார்த்திகேயனும் சேர்ந்திருக்கிறார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது புதிய வீட்டில் மாடித் தோட்டம் அமைத்திருக்கிறார். இந்த தோட்டத்தை வீடியோ எடுத்து தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது:
இதுதான் எனது காய்கறி தோட்டம். ஊரடங்கு தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு தான் இந்த தோட்டத்தை தயார் செய்தேன். இப்போது இங்கு விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை பறித்து பயன்படுத்துகிறேன் . இதை உங்களுக்கு காட்ட வேண்டும் என்று தான் இந்த வீடியோ.
இந்த தோட்டத்தை இன்னும் முழுமையாக தயார் செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது. அதற்கு இன்னும் கொஞ்ச காலம் ஆகும். அதெல்லாம் தயாரானதும் திரும்பவும் உங்களுக்கு காட்டுகிறேன். எல்லோரும் பத்திரமாக இருங்கள். சீக்கிரம் நமது வாழ்க்கையும், இந்த காய்கறி தோட்டம் போன்று செழிப்பாகி விடும். என்றார்.