பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தெய்வமகள் சீரியலில் பிரபலமான வாணி போஜன், சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு சீரியல்களில் நடித்தே சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர்களை வைத்திருந்தார். அதையடுத்து சினிமாவுக்கு வந்து ஓ மை கடவுளே படம் மூலம் பிரபலமாகி விட்ட வாணி போஜன் தற்போது அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வாணி போஜனிடத்தில், சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வர என்ன காரணம்? என்று ஒரு ரசிகர் கேட்டபோது, சின்னத்திரையில் எத்தனை சீரியல்களில் நடித்தாலும் கிட்டத்தட்ட ஒரே சாயல் கொண்ட கேரக்டர்களாகத்தான் கிடைக்கும். ஆனால் சினிமாவில் மாறுபட்ட கதைகளில் தயாராவதால் மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்க முடியும். அதனால் தான் நான் சினிமாவுக்கு வந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் வெற்றி பெறுவதற்கு கவர்ச்சி, திறமை இரண்டில் எது முக்கியம்? என்று இன்னொரு ரசிகர் கேட்டதற்கு, கவர்ச்சியும் தேவை தான். என்றாலும் திறமை இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று பதில் கொடுத்துள்ளார் வாணி போஜன்.