‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது |
சின்னத்திரை நடிகையான வாணி போஜன் இன்று சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு உட்பட இன்னும் சில படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன. வாணி போஜனின் மிரட்டலான நடிப்பில் வெளியான செங்களம் வெப்தொடருக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் பேச்சுலர் பட வாய்ப்பை தவறவிட்டது குறித்து மனம் திறந்துள்ளார். பேச்சுலர் படத்தில் முதலில் ஜி.வி.பிரகாஷுடன் வாணி போஜன் தான் நடிக்க இருந்தார். ஆனால், படத்தில் ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் நெருக்கமான காட்சிகள் அதிகம் வரும். சீரியல் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த வாணி போஜனுக்கு இது போன்ற காட்சிகளில் நடித்தால் மக்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்களா? என்ற பயம் வந்துள்ளது. அதேசமயம் தனக்காக படத்திற்கு தேவையான நெருக்கமான காட்சிகளையும் மாற்றி அமைக்கக்கூடாது என்று யோசித்த அவர், அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.