ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழ் சினிமாவில் சில படங்கள் முழுமையாக முடிவடைந்து தணிக்கை சான்றிதழ் பெற்றும் பல்வேறு காரணங்களால் வெளிவராமல் முடங்கிப் போய் உள்ளன. கடந்த வருட கொரோனா தொற்றின் போதே அந்தப் படங்களில் சில ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இப்போது இரண்டாவது அலை காரணமாக, மூடப்பட்ட தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத சூழல் உள்ளது. முன்னணி நடிகர்களின் முக்கிய படங்களை ஓடிடிக்குக் கேட்டால் அவர்கள் சொல்லும் அதிகப்படியான விலையைப் பார்த்து சில ஓடிடி தளங்கள் மிரண்டு ஓடிவிடுகிறார்களாம். அதனால், முடங்கியுள்ள படங்களைத் தேடிப் பிடித்து குறைந்த விலையில் வாங்கி வெளியிட முயற்சித்து வருகிறார்களாம். அதில் சில படங்களை வாங்கியும் விட்டதாகச் சொல்கிறார்கள்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா நடித்த 'நரகாசூரன்' படம் முடிந்து மூன்று வருடங்களாக முடங்கியிருந்தது. இப்படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிட வாங்கிவிட்டார்களாம்.
முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள 'பொன்மாணிக்கவேல்' படமும் ஒரு வருடத்திற்கும் மேலாக வெளியாகாமல் இருந்தது. அப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கும் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாம்.
இப்படி முடங்கிப் போயுள்ள மற்ற படங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ள 'பாரிஸ் பாரிஸ்', விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்', விஷால் நடித்துள்ள 'மதகஜராஜா' (7 வருடங்களாக), வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'பார்ட்டி', சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்', எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'இறவாக்காலம்', ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள 'அண்டாவ காணோம்', என பட்டியல் இன்னும் நீள்கிறது. இந்தப் படங்கள் ஓடிடியில் வெளியாகுமா என அவற்றின் தயாரிப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும்.
முன்பெல்லாம் தியேட்டர்களில் மட்டும்தான் படங்களை வெளியிட முடியும். தற்போது ஓடிடி தளங்களிலும், டிவி சானல்களிலும் நேரடியாகவே வெளியிடும் வாய்ப்பு உருவாகிவிட்டது. இப்படி வெளியிட ஆசையிருந்தாலும் எதிர்பார்க்கும் விலை கிடைக்காததால் பலர் காத்திருக்கிறார்களாம். இருப்பினும் சிலர் தியேட்டர்களில் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என உறுதியாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.