பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் |
இந்தியாவில் புகழ்பெற்ற வெப் தொடர் தி பேமிலி மேன். இந்தியாவின் ரா அமைப்பில் பணியாற்றும் அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரி, ஒரு நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு எப்படி சர்வதேச சதி திட்டங்களை முறியடிக்கிறார் என்பதுதான் இதன் ஒன்லைன்.
இதில் அந்த அதிகாரியாக மனோஜ் பாஜ்பாய் நடிக்கிறார். அவரது மனைவியாக பிரியாமணி நடிக்கிறார். தற்போது இதன் இரண்டாவது சீசன் பலத்த எதிர்ப்புக்கு இடையே வெளியாகி உள்ளது. இதில் விடுதலைபுலிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி இங்குள்ள சில அமைப்புகளும், சில கட்சிகளும் குற்றம் சாட்டி உள்ளது. இரண்டாவது சீசனில் சமந்தா இலங்கை தமிழ் பெண்ணாக நடித்திருக்கிறார். இதனை ராஜ் மற்றும் டிகே இயக்கி உள்ளனர்.
இந்த சீரிசின் முதல் சீசனில் ஸ்ரீகாந்த் திவாரி காஷ்மீர் தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முறியடித்தார். தற்போது வெளியாகி இருக்கும் 2வது சீசனில் இலங்கை போராளிகளும், பாகிஸ்தான் உளவு பிரிவும் இணைந்து நடத்த இருந்த சதி திட்டத்தை முறியடித்தார். மூன்றாவது பாகத்தில் என்ன செய்யப் போகிறார் என்பது இரண்டாவது சீசனின் 9வது (கடைசி) பகுதியில் தெளிவாக குறிப்பிட்டு விடுகிறார்கள்.
கொரோனாவால் மக்கள் படும் துன்பங்களை காட்டுகிறார்கள். அதன்பிறகு ஒரு சீன இளைஞன் ஒரு சாதாரண அடுக்குமாடி வீட்டுக்கு கையில் லேப் டாப்புடன் நுழைகிறான். பிறகு தனது அறையில் அமர்ந்து தனது லேப் டாப்பை திறந்து தனது தலைமையுடன் உரையாடுகிறான். நான் நாகாலாந்தையும், அருணாச்சல பிரதேசத்தையும் கவர் செய்து விட்டேன் உங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறேன் என்று மெசேஜ் அனுப்புகிறான். அனுமதி கிடைப்பதோடு தொடர் முடிகிறது.
எனவே 3வது சீசனில் இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் சீன அரசு அல்லது சீனாவில் உள்ள ஒரு ரகசிய அமைப்பு இந்திய மக்கள் மீது கொரோனா வைரசை பரப்ப திட்டமிடுகிறது. அதனை ஸ்ரீகாந்த் திவாரி எப்படி தடுக்கப் போகிறார் என்பதுதான் 3வது சீசனின் கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது..