பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சினிமாவில் பிசியாக நடித்து வந்தபோதே ராஜ்கிரணை வைத்து ப.பாண்டி என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றார் தனுஷ். அதையடுத்து நாகார்ஜூனாவை வைத்து இன்னொரு படத்தை இயக்கும் பணிகளில் இறங்கியவர் அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.
இந்நிலையில் தற்போது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிப்படங்களிலும் நடித்து மிகப்பெரிய நடிகராகி விட்டார். கடந்த மூன்று மாதங்களாக தி கிரேமேன் படத்திற்காக அமெரிக்காவில் முகாமிட்டு நடித்து வந்த தனுஷ், சமீபத்தில்தான் அந்த படத்தில் நடித்து முடித்தார். தான் நடித்து வெளியான கர்ணன் படத்தை கூட அவர் அமெரிக்காவில் உள்ள தியேட்டரில் தான் பார்த்தார்.
இப்படியான நிலையில் தனுஷ் மீண்டும் படம் இயக்குவது எப்போது? என்பது குறித்த ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தற்போது கார்த்திக் சுப்பராஜ், மாரி செல்வராஜ், கார்த்திக் நரேன், ராம் குமார் என பல திறமையான இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறேன். அவர்கள் சொன்ன கதைகள் எனை பெரிய அளவில் பாதித்து விட்டதால் அவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதனால் தான் மீண்டும் டைரக்சனில் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. இருப்பினும் இன்னும் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் படம் இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் தனுஷ்.